tamilnadu

img

தமிழ்ப் பிரச்சார சபாவை வட மாநிலங்களில் நிறுவாதது ஏன்? ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

தமிழ்ப் பிரச்சார சபாவை வட மாநிலங்களில் நிறுவாதது ஏன்? ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

“தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டது ­போல, வட­இந்தி­யாவில் தென்னிந்திய மொழி ஒன்­றைக் கற்றுக் கொள்ள உத்­தர பாரத தமிழ் பிரச்­சார சபாவையோ, திராவிட பாஷா சபாவை யோ ஏன்  நிறுவவில்லை?” என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என்ற பெயரில் முரசொலி நாளிதழில் எழுதியுள்ள கடிதத்தில் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்தியில் வாழ்த்துச்  சொல்லாத தமிழிசை பாஜக நிர்வாகியான அன்புச் சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு ‘மும்மொழி’யில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னு டைய பிறந்தநாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், சகோதரி மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய ‘பண்பையும்’ காட்டியிருக்கிறார். சகோதரி தமிழிசை யின் வாழ்த்துச் செய்திக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘இந்தி’ இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு.  தமிழகத்தின் உணர்வையே பிரதிபலித்துள்ளார் தமிழ் - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழி யில் வாழ்த்தியிருக்கிறார். உங்களில் ஒருவனான எனக்கு தெலுங்கு தெரி யாது.  நான் படித்ததும் இல்லை. தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த சகோதரி தமிழிசை, தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு.  ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்து கொள்ளவில்லை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார்.  இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய தில்லை என்பதையும்,  தேவைப்படுகிற வர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கானப் பிறந்த நாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள சகோதரி தமிழி சைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், அவர் நமது ‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின்

தமிழ்ப் பிரச்சார சபாவை வடமாநிலங்களில் நிறுவாதது ஏன்? 

திருமகள் அல்லவா! செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் வந்துவிட்டது சகோதரி தமிழிசை தெலுங்கு  எழுத்துகளில் வாழ்த்துச் செய்தியை எழுதக்கூட அவசிய மில்லை என்கிற அளவிற்கு அவரு டைய பதிவிலேயே இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிய முடிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறை யின் முன்னேற்றமும், ஒரு மொழியி லிருந்து மற்றொரு மொழிக்கு  எழுத்தாகவும் குரலாகவும் மாற்றக் கூடிய வாய்ப்பும் எளிய முறையில் எல்லோரும் பயன்படுத்தும் வகை யிலான மென்பொருள்கள் கை பேசிகளிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.  Google Translate, Chat GPT,  Artificial Intelligence போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக்  கடப்பதற்கு உதவுகின்றன. அச்சிடப் பட்ட காகிதத்தைப் படம் எடுத்து,  அதை இன்றுள்ள தொழில் நுட்பத்தில் எழுத்துருக்களாக மாற்றி, நாம் எளிதில் பயன் படுத்திக் கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகி விட்டன.  பாஜக ஆட்சியாளர்களுக்கு புரியாதது ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாண வர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த  பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாண வர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமை யும். கல்வியாளர்கள், மொழி அறி ஞர்கள், குழந்தைகள் நல  செயல்பாட்டாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பார்வை கொண்ட பலரும் இதைத்தான் தெரிவிக்கின்றனர். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பாஜக-வும் அதன்  நிர்வாகிகளும் மொழித்  திணிப்பைக் கட்டாயமாக்கு கிறார்கள்.  ஒருவர் விரும்புகிற எந்த  மொழிக்கும் நாங்கள் எதிரி களல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாகச் சொல் கிறோம். ஆறறிவு கொண்ட அனை வருக்கும் இது புரிகிறது. ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் புரியவில்லை? புரியா மல் இல்லை. புரியாதது போல பாசாங்கு செய்கிறார்கள். அவர்க ளின் நோக்கம் ஏதேனும் மூன்று மொழி என்பதல்ல.  இந்திய மொழிகளை அழிப்பதே திட்டம் சிறுபான்மை சமுதாய மக்க ளுக்கான உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும்  தெலுங்கு, கன்னட மொழிகளும் நம்முடைய கல்விக் கொள்கை யின்படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மொழிகள் எதுவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம்  செலுத்தக் கூடியதல்ல. ஆனால்,  பாஜக-வின் நோக்கமே தமிழ் நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாய மாகத் திணிக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாண வர்களுக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்று  கரிசனம் வழிவதுபோல கேட் கிறார்கள்.  இந்தியாவின் தென்மாநிலங் களில் உள்ளவர்கள் இந்தி மொழி யைக் கற்பதும், வட மாநிலத்த வர்கள் தென்னிந்திய மொழிகளில் ஒன்றைக் கற்பதும் தேச ஒற்றுமைக்கு வழிவகுக்குமென காந்தியடிகள் நம்பினார். அவரு டைய விருப்பத்தின் அடிப்படை யில் உருவானதுதான் தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா. சென் னையில் உள்ள அதன் தலைமை நிலையத்திற்கு காந்தியடிகளே நேரில் வந்து நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். தற்போது 6000  மையங்களுடன் தென்மாநிலங்கள் முழுவதும் இந்தி பிரச்சார சபா இயங்கி வருகிறது.  திராவிட பாஷா பிரச்சார சபா எங்கே? தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார  சபா நிறுவப்பட்டதுபோல, வட இந்தியாவில் தென்னிந்திய மொழி  ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா? வள்ளுவர் சிலையை கங்கை  கரையில் நிறுவுவதாக சொல்லி குப்பை மேட்டில் போட்டவர்களா தமிழ் கற்றுத் தருவதற்கான அமைப்பை நிறுவப் போகிறார்கள்?  கோட்சே வழியைப் பின்பற் றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒரு போதும் நிறை வேற்ற மாட்டார்கள். சென்னை மாகாணம் என்ற பெயர் இருந்த காலத்திலேயே ‘தமிழ்நாடு காங்கிரஸ்’ என்று பெயர் வைக்கச் செய்தவர் காந்தி யடிகள். தமிழ்நாட்டில் தற்போது ஓடும் ரயில்களுக்கு கூட இந்தி -  சமஸ்கிருதப் பெயர்களை வைப்ப வர்கள் ஒன்றிய பாஜக ஆட்சியா ளர்கள். தமிழையும் பிற மொழி களையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம்.  இவ்வாறு முதலமைச்சர் கேட்டுள்ளார்.