நிதிநிலை அறிக்கையில் தமிழகம் எங்கே?
ஒன்றிய பாஜக அரசுக்கு முதல்வர் கேள்வி
திருநெல்வேலி, பிப். 7 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2 நாட்களாக திருநெல்வேலி மாவ ட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். இதில், வெள்ளிக்கிழமையன்று நடை பெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: 2023 டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கனமழையால் திருநெல்வேலி, தென் காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல் லாம் பாதிக்கப்பட்டது என்பது அனை வருக்கும் தெரியும். அந்த பாதிப்புகளில் இருந்து மீள, ஒன்றிய அரசிடம் தமிழக அரசின் சார்பில் நிதி கோரினோம். இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் தமிழகம் வந்தனர். ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை. வெள்ள நிவாரணமாக நாம் கேட்டது ரூ. 37 ஆயிரத்து 907 கோடி. வேறு வழியில்லா மல் ஒன்றிய அரசு நிதி கொடுத்தது எவ்வ ளவு தெரியுமா? வெறும் ரூ. 276 கோடி. நாம் கேட்ட நிதியில் ஒரு விழுக்காட்டைக் கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. இப்படித் தான் ஒன்றிய அரசு நடந்து கொண்டிருக்கி றது. சரிபோகட்டும், இந்த பட்ஜெட்டிலாவது தமிழகம் கோரிய நிதியை ஒதுக்கித் தரு வார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள். தமிழகத்தை மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழகம் இருந்தால் போதுமா? அரசு வெளியிடுகிற நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் பெயர் இருக்க வேண்டாமா? தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க மட்டும் தமிழகத்துக்கு வந்தால் போதுமென்று நினைக்கிறார்களா? - இப்படி நாம் கேட்கிற கேள்விகளுக்கு பாஜக-விடமிருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலகளவில் பேமஸ். ஆனால், இப்போது மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வாதான் அதைவிட பேமஸாக இருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.