பார் கவுன்சில்களையும் கைப்பற்ற பாஜக முயற்சி
‘வழக்கறிஞர்கள் திருத்த மசோதா- 2025’ என்பது சட்டத் துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில், “சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு” என்ற அறிஞர் அண்ணாவின் வாச கத்தை குறிப்பிட்டு கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் மேலும் கூறியிருப்பதாவது: ‘வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு 2025’ என்பது சட்டத் துறையின் சுதந்திரம் மீது தொடுக்கப் படும் நேரடித் தாக்குதல் ஆகும். முதலில், ‘தேசிய நீதிபதிகள் நிய மன ஆணையம்’ (NJAC) வழியாக, நீதிபதி நியமனங்களை அபகரிக்க முயன்றதும், பின்னர் நீதி பதி நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்களில் கொலீஜியத்தின் பரிந் துரைகளைப் புறந்தள்ளி யதும் என 2014 முதல், ஒன்றிய பாஜக அரசானது அமைப்பு ரீதியாக நீதித் துறையின் சுதந்திரத்தைச் சிதைத்து வருகிறது. தற்போது பார் கவுன்சில்களின் கட்டுப்பாட்டையும் தன் கையில் எடுத்துக் கொள்ள முயல்வது மூலம் சட்டத் தொழிலின் தன்னாட்சியைப் பறித்து, நீதித்துறையின் சுதந்தி ரத்தையே பலவீனப்படுத்தப் பார்க்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட் ராஸ் பார் கவுன்சில் என மாற்ற நினைப்பதன் மூலம் பாஜக-வுக்குத் தமிழ் மேல் உள்ள வெறுப்பு இந்தச் சட்டவரைவிலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாடு வெறும் பெயரல், அது எம் அடையாளம்! தன்னியல்பாக வெடித்த போராட்டங்களாலும், கடும் எதிர்ப்பு களாலும் தற்போது இந்தச் சட்ட முன்வடிவைத் திரும்பப் பெறும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளப் பட்டுள்ளது.
எனினும், இது மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, புதிய வடிவில் கொண்டு வரப்படும் என்பது கண்டனத்துக்குரியது ஆகும். இந்தச் சட்டவரைவை முற்றிலு மாகத் திரும்பப் பெற வேண்டும், சட்டத் தொழிலின் தன்னாட்சியை மதிக்க வேண்டும் என ஒன்றிய அரசைத் திமுக வலியுறுத்துகிறது. இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர்கள் சட்டம் 1961-இல் திருத்தம் செய்வதற்கான மசோதா- 2025, பிப்ரவரி 13 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு எதிராக நாடு முழுவதுமுள்ள வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களைப் புறக்கணித்துப் போராட்டத்தில் இறங்கினர். தற்போதைய திருத்த மசோதா-வை திரும்பப் பெறுவதாகவும், விரிவான ஆலோசனைக்குப் பிறகு புதிய மசோதா கொண்டுவரப்படும் என்றும் ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளது.