சென்னை, ஜூலை 6- திருவள்ளூர் அடுத்த பட்டரைப் பெரும்புதூரில் உள்ள அரசு பள்ளியில் அகழாய்வில் கண்டுபிடிக்கப் பட்ட பொருட்களின் கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூர் கிரா மத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றன.இந்த அகழாய்வில் 1201 தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதில் பழங்கற்காலம், இடைக்கற்காலம், மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், இரும்புக் கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடிகளால் செய்யப்பட்ட மணி கள், குதுபவளம், பளிங்கு மற்றும் சுடுமண்ணாளான பொம்மைகள் ஆகியவை முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு காசு உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காவி வண்ணம் பூசப்பட்ட சிவப்பு பானை ஓடுகள், கூம்பு வடிவ சாடிகள், சாடிகளின் மூடிப்பகுதி கள், மற்றும் கூரை ஓடுகள் ஆகியவையும் கிடைக்கப் பெற்றன. இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியை தொல்லியல் துறை சார்பில் பட்டரைப்பெரும் புதூரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் நடத்தினர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒரு சில பொருட்களை புத்தகத்தில் பார்த்ததை தற்போது நேரில் பார்ப்பது சநந்தோஷத்தை அளிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சுடுமண்ணாளான உறை கிணறுகள், மற்றும் செங்கற்களினால் கட்டப்பட்ட வட்ட வடிவ கிணறு ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. சங்க காலத்தைச் சேர்ந்த 3.91 மீட்டர் ஆழம் கொண்ட இது போன்ற பெரிய வடிவிலான கிணறு கிடைப்பது இதுவே முதல் முறையாகும் என்றும், இந்த கிணறுகளை பாதுகாக்கப்பட்ட நினைவச் சின்னமாக்க நட வடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தப் போவதாக தொல்லி யல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.