tamilnadu

img

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

சிதம்பரம் இரவிசந்திரன்

 புத்தாண்டு முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் வரை க்ளிட்டர்  எனப்படும் பளபளப்புப் பொருட்கள் இன்று மனித வாழ்வில் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன. இப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் நகச்சாயங்கள் முதல் பேனா வரை ஜனரஞ்சகப் பொருட்கள்  ஏராளம். உடலிலும், ஆடைகளிலும் பட்டால் இவற்றை அப்புறப்படுத்துவது கடினம்.

சூழலுக்கு அச்சுறுத்தலாகும் க்ளிட்டர்கள்
என்றாலும் இவற்றின் விலை மிகக்குறைவு. மற்றவர்களை சுலபமாகக் கவரமுடியும் என்பதால் இவை மக்களுக்குப் பிரியமானவையாக உள்ளன.  ஆனால் இவை சூழலுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. 2019ல் கடல் மாசு இதழில் (Marine Pollution bulletin) வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரை சூழலில் இப்பொருட்கள் நுண் பிளாஸ் டிக்குகளின் பரவலிற்கு முதன்மை மூலமாக உள்ளன என்று கூறுகிறது.

க்ளிட்டர்கள் நுண் பிளாஸ்டிக்குகளா?
ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுள்ளவையே க்ளிட்டர்கள். இத்தகைய நுண் பிளாஸ்டிக்குகளே புவி வெப்ப உயர்விற்கு மூலகாரணமாக  இருக்கின்றன. இவ்வகைப் பிளாஸ்டிக்குகளில் காணப்படும் அம்சங்கள்  க்ளிட்டர்களிலும் உள்ளன. அதனால் இப்பொருட்கள் நுண் பிளாஸ்டிக்குகள் போலவே ஆபத்தானவை என்று சூழல் ஆய்வாளர் ஜோயல் பேக்கர் கூருகிறார்.

மின்னும் பொருட்களின் பின்னால் ஒளிந்திருக்கும் நஞ்சு
பாலி எத்திலீன் டெரப்தாலேட் (PET) என்று அழைக்கப்படும் நுண் பிளாஸ் டிக்கைப் பயன்படுத்தியே இப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் இருக்கும் அலுமினியக் கவசமே இப்பொருட்கள் ஒளியைப் பிரதிபலித்து மின்னக் காரணமாக உள்ளது. சில க்ளிட்டர்களின் தயாரிப்பில் பாலி வினைல்  குளோரைடு (PVC) போன்ற பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மனிதனுக்கும் சூழலுக்கும் கேடு
பிளாஸ்டிக் தயாரிப்பின்போது ஆபத்தான பல பொருட்களும் பயன் படுத்தப்படுகின்றன. இவை மனிதனுக்கும், சூழலுக்கும் கடுமையான பாதிப்பு களை ஏற்படுத்துபவை. இவை மண், காற்று, நீர், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை மாசுபடுத்துகின்றன. இது மனிதன் உட்பட  எல்லா உயிரினங்களிலும் நோய் எதிர்ப்பாற்றல், இனப்பெருக்கத் திறன் குறைவு போன்ற அதிதீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

மனிதன் இல்லாத இடத்திலும் இவை உண்டு
மனித வாசம் இல்லாத துருவப்ப பகுதிகளிலும் நுண் பிளாஸ்டிக் குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை உணவு என்று தவறாகக் கருதி மீன்கள் உண்பதுண்டு. இவை அந்த உயிரினங்களின் வயிற்றில் அகப்பட்டு அதனால் சத்துகள் அடங்கிய உணவு கிடைக்காமல் போகிறது. உடல் பலவீனமடைந்து இவற்றின் எடை குறைகிறது. தொடர்ந்து மரணத்தைத் தழுவுகின்றன.  ஒவ்வொரு மீன் இனத்திற்கும் இப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறானவை என்று ஜோயல் கூறுகிறார். பிளாஸ்டிக்குகள் செரி மானக்குழாய் வழியாகச் செல்கின்றன என்றாலும் சில பொருட்கள் கடந்து செல்ல முடியாத அளவு பெரிதாக உள்ளபோது இவை உடனடியாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

பசுமைத் தீர்வுகள் உண்டா?
மின்னும் இப்பொருட்கள் உருவாக்கும் பாதிப்புகளைத் தீர்க்க மீடோப் ரூக், ரொனால்டு பிரிட்டன் லிமிட்டெட் போன்ற பிரபல க்ளிட்டர் உற்பத்தி  நிறுவனங்கள் சூழலுக்கு நட்புடைய க்ளிட்டர்களை தயாரிக்கத் தொடங்கி யுள்ளன. தாவர செல்களில் இருக்கும் செல்லுலோஸில் உள்ள நானோ படிகங்களைப் (nano crystals) பயன்படுத்தி இவற்றைத் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரத் தீர்வு நம் கையில்
இயற்கைக்கு நட்புள்ள பளபளப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும்  வழிமுறையை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள் ளனர். ஆனால் இவ்வாறு தயாரிக்கப்பட்ட இயற்கைப் பொருட்களுக்கு செயற்கை க்ளிட்டர்கள் போல கடல் சூழல் மண்டலத்தைப் பாதிக்கும் ஆற்றல்  உண்டு என்று 2020இல் ஆபத்தான பொருட்களுக்கான சர்வதேச இதழில்  (Journal of Hazardous materials) வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் இதற்கு நிரந்தரத் தீர்வு மனிதர்களாகிய நம் கையில்தான் உள்ளது. போலிப் பகட்டுகள் சூழலை நாசப்படுத்தும். மனிதனின் சுயநலத் தால் ஏற்கனவே பூமி சூடாகிறது. இந்நிலையில் சூழல் சீரழிவுகள் அன்றாட  நிகழ்வுகளாகின்றன. உள்ளதைக் காத்து இயற்கைக்கு துரோகம் செய்யாமல் மனிதன் வாழ்ந்தால் மட்டுமே நாளை பூமியில் மனிதகுலத்தின் வாரிசுகள் வாழும்.