நேரு உள்விளையாட்டரங்கில் மாபெரும் கால்பந்து போட்டி
சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிக்கும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கும் இடையே மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பங்கேற்று போட்டியை கண்டுகளித்தனர். இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது. பிரேசில் லெஜென்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு போட்டி என்பதைத் தாண்டி, எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு சிறப்பான தருணமாக இருந்தது. வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் இதுவும் ஒன்று. குழந்தைகளே, கடினமாகப் படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமாக வெற்றி பெறுங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.