tamilnadu

முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 824 பணிகள்

முருகன்  கோவில்களில்  ரூ.1,085 கோடியில் 824 பணிகள்

பேரவையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்

சென்னை, ஏப்.25- தமிழகத்தில் முருகன்  கோவில்களில் ரூ.1,085 கோடியில் 824 பணிகள் நடை பெற்று வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், “சிறுவாபுரி பால சுப்பிரமணியசுவாமி  கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதி கள் செய்து கொடுக்கப்படுமா? தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடு களில் நடைபெறும் திருப்பணிகளை போல, அறுபடை வீடுகள் அல்லாத  கோவில்க ளிலும் திருப்பணிகள் நடைபெறுகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்., இதற்கு பதிலளித்துபேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, “சிறுவாபுரி முருகன்  கோவிலுக்கு வார இறுதிநாட்களில் 50 ஆயிரம் பக்தர்களும், வார நாட்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை யிலான பக்தர்களும் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக நாள்தோறும் அன்னதானம் திட்டமும், மருத்துவ வசதி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்குள் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் 110 முருகர்  கோவில்களில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு முருகன்  கோவில்களில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் ரூ.1,085 கோடியில் 824 பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துலக முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.