பீகாரில் 82 ஏக்கர் கோதுமை பயிர்கள் தீயில் எரிந்து நாசம்
பாட்னா பீகார் மாநிலம் பாட்னா மாவட் டத்தின் ஷாபாத் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 82 ஏக்கர் பரப்பள விலான கோதுமை பயிர்கள் பயங்கர தீ விபத்தில் சிக்கி முழுமையாக எரிந்து சாம்பலா கின. விவசாயிகளின் கண் எதிரி லேயே ஓராண்டு உழைப்பு தீயால் கருகிய சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப கட்ட தகவல்களின்படி, விவசாய நிலத்தின் வழியே சென்ற உயர் ்மின்னழுத்த மின்சாரக் கம்பிகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பொறி சிதறி, காய்ந்திருந்த பயிர்களில் தீப்பற்றியதாகக் கூறப் படுகிறது. கோதுமைப் பயிர்கள் எரிந்ததில் சுமார் ரூ.16 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.
