பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பைசரனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி னர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக என்ஐஏ வெளி யிட்டுள்ள அறிவிப்பில்,”ஹில் பார்க் பகு தியைச் சேர்ந்த அகமது ஜோதர், பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும், பயங் கரவாதிகள் என்று தெரிந்தும் அவர் களுக்கு குடிசையில் தங்கவைத்து, உணவு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். இதனை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறப்பட்டுள்ளது. மேலும், பஹல்காமில் துப்பாக் கிச்சூடு நடத்திய 3 பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கைது செய்யப்பட்டவர்கள் உறுதி செய்தததாக என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித் துள்ளனர். புதுதில்லி