tamilnadu

img

‘ஆளுநர் மாளிகையை ஷாகாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்’

‘ஆளுநர் மாளிகையை ஷாகாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்’

அரசியலமைப்பை உயர்த்திப்பிடித்து வாலிபர் சங்கம் பேரணி

திருவனந்தபுரம், ஜூன் 20 - கேரள ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் கிளையாக மாற்றும் நட வடிக்கைக்கு எதிராக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் போராட்டத்தில் இறங்கியது.  அரசியலமைப்பை உயர்த்திப் பிடித்தபடி, வாலிபர் சங்க ஊழியர்கள், கேரள ஆளுநர் மாளிகைக்கு பேரணி யாகச் சென்றனர். அவர்களை, ஆளுநர் மாளிகைக்கு முன்னால் 100 மீட்டர் தூரத்தில் காவல் துறையினர் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். கேரள ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ்பவனையே ஆர்எஸ்எஸ் சின்னங்கள் மற்றும் படங் களை நிறுவுவதன் மூலம் ஆர்எஸ்எஸ் கிளையாக மாற்ற ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் முயற்சிக்கிறார். சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த இயக்கம் ஆர்எஸ்எஸ். ஆனால், அதனை மக்களிடமிருந்து மறைக்கும் விதமாக இவ்வாறு செய்கிறார் என்று போராட்டத்தின் போது வாலிபர் சங்கத்தி னர் குற்றம் சாட்டினர். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ்மய மாக்க தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆளு நர் மாளிகை நிகழ்ச்சிகளில், அரசாங்கத் தால் அங்கீகரிக்கப்பட்ட பொது படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை புறக் கணித்து விட்டு, வேளாண்மைத் துறை மற்றும் கல்வித் துறை நிகழ்ச்சிகளில் திட்டமிட்டே ஆர்எஸ்எஸ் அடை யாளங்களை புகுத்துகிறார். ஆர்எஸ் எஸ்ஸின் அரசியல் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் இடமாக ராஜ்பவனை மாற்றுவதை ஏற்க முடியாது. எனவே, இந்தப் பிரச்சனைகளில் வரும் நாட் களில் வாலிபர் சங்கம் தனது போராட்டங் களைத் தீவிரப்படுத்தும் என்று வாலிபர் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.