‘முருக பக்தர்கள்’ வந்தார்கள்; ‘முருக பக்தி’யை காணவில்லை!
மதுரை, ஜுன் 22- ஜெ. பொன்மாறன் மதுரை பாண்டி கோவில் அம்மா திடலில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்து முன்னணி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், ஆர்.எஸ்.எஸ் தென் பாரதத் தலைவர் வன்னிய ராஜன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர்.
அறுபடை வீடுகளின் கண்காட்சி மாநாட்டுக்காக திருப்பரங்குன்றம் மலை பின்னணியில் முருகனின் முழு உருவ கட்வுட் மற்றும் அறுபடை வீடு கள் அடங்கிய வடிவில் திறந்த வெளி மாநாட்டு மேடை அமைக்கப்பட்டி ருந்தது. இந்த ஏற்பாடு மக்களை அதிக அளவில் ஈர்த்தது. திருபுவனத்தைச் சேர்ந்த மணிமாறன் கூறுகையில், “ஒரே இடத்தில் அறுபடை வீடு முரு கன் கோவில் உள்ளதாக சமூக வலை தளத்தில் பார்த்தேன். அதை ஒரே இடத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆவ லுடன் வந்தேன்” என்றார். மேலூர் பகுதியைச் சேர்ந்த பூமா, “எங்களுடைய ஊரில் வந்து சொன்னார் கள், மதுரையில் பாண்டி கோவில் அரு கில் முருகனின் ஆறுபடை வீடுகள் கோவில் கொண்ட செட் அமைத்துள் ளோம். வந்து பாருங்கள், உங்களுக்கு அறுபடை வீடு முருகனே ஒரே இடத்தில் பார்க்கும் புண்ணியம் கிடைக் கும் என்று கூறினார்கள்” என்று தெரிவித் தார். முழுக்க முழுக்க அரசியல் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது உரையில், “இது முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் மாநாடு அல்ல. இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல” என்று கூறிக் கொண்டார். அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் ஆன்மீக புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவிகர மாக இருக்கும்” என்றார். ஆனால் மாநாட்டில் பேச அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே அரசியல் கட்சி தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பங்கேற்பு இதன் அரசியல் தன்மையை தெளிவாக வெளிப்படுத்தியது.
2026 தேர்தலை நோக்கிய மதவாத அரசியல் உத்தி அரசியல் பார்வையாளர்கள் இந்த மாநாட்டை 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய தயாரிப்பாக பார்க்கின்றனர். வட மாநிலங்களில் ராமர் கோவில் என்ற தேர்தல் உத்தியை பயன்படுத்திய அதே பாணியில், தமிழகத்தில் முருகன் என்ற கருவியை பயன்படுத்தி இந்துக்களின் வாக்கு வங்கியை பிரிக்கும் முயற்சி என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். காரைக்குடியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் இந்த நிலைமையை தெளிவாக வெளிப்படுத்துகிறார். “இந்த மாநாட்டை யார் நடத்து கிறார்கள், எந்த கோரிக்கைக்காக நடத்தப்படுகிறது என்று தெரியும். ஆனால் அதோடு நான் உடன்பட வில்லை. ஏனென்றால் என்னோடு இஸ்லாமிய நண்பர்களும் பழகு கிறார்கள். நாங்கள் சகோதரர் களாகத்தான் பழகுகின்றோம்” என்று அவர் கூறினார். மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் அபாயம் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் போன்ற பலர் தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் வந்திருந்தாலும், இத்தகைய மாநாடுகளின் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான செய்திகள் பரப்பப்படும் அபாயம் உள்ளது; குறிப்பாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான மறைமுக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தனர். இந்து முன்னணி கடந்த காலங்களில் மதுரையில் நடத்திய நடவடிக்கைகள் இதற்கு சான்றாக உள்ளன. அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் மீதான தாக்குதல் மற்றும் அமைப்பின் நிர்வாகி ராஜகோபாலின் மரணம் போன்ற சம்பவங்களை மாநாட்டு தலைவர் தமது உரையில் நினைவுபடுத்தியது மாநாட்டின் உண்மையான ‘கலவர’ நோக்கத்தை தெளிவுபடுத்தியது.
சட்ட மீறல்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளை அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கொடிகள் பொதுவெளி யில் கட்டுவதற்கு தடைகள் விதித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கொடி கள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் நான்கு வழி சாலை பகுதிகளில் கட்டப்பட்டிருந்தன. இதனால் பாண்டி கோவில் - மேலூர் சாலை மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் சிக்னல்கள் எதுவும் செயல்படாததால் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க காவல்துறையும் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆளுநரின் அரசியல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முதல் நாளே வந்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட அறுபடை கண்காட்சி யை பார்வையிட்டு, “தமிழ் கடவுள் முரு கனின் அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் பார்த்து தரிசித்தது மகிழ்ச்சி. இது நமது கலாச்சாரத்தின் அடை யாளம்” என்று கூறிக் கொண்டார். மதவெறியர்களுடன் கரைந்து விட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் “மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவது பொருத்த மானது. இதில் அரசியல் கிடையாது” என்று மழுப்பினார். ஆனால் இவ்வா றான கூற்றுகள் மாநாட்டின் உண்மை யான நோக்கத்தை மறைக்கும் முயற்சியாகவே வெளிப்பட்டன. மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் தமிழகம் பல நூற்றாண்டுகளாக மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லி ணக்கத்திற்காக பெயர் பெற்ற மாநில மாக உள்ளது. ஆனால் தற்போது முருக பக்தர்கள் மாநாடு போன்ற நிகழ்ச்சி களின் மூலம் இந்த பாரம்பரி யத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மதுரை மக்க ளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் மாநாட்டின் தன்மையை சரியாக சுட்டிக்காட்டு கிறார்.
“கோயிலுக்கு வந்து செல்வது போல் இருக்கிறது. வெளியில் பொருட் கள் விற்பது போல் இங்கேயும் விற் கின்றார்கள். ஒரு ஆன்மீக பொருட் காட்சிக்கு வந்து செல்வது போல் இருக்கிறது” என்று அவர் கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாடு, பக்தர்களின் உண்மையான மத உணர்வுகளை அரசியல் நோக்கங் களுக்கு சங் பரிவாரக் கூட்டம் எவ்வாறு பயன்படுத்தும் என்பதற்கான சான்றா கும். மக்கள் உண்மையான பக்தி உணர்வுடன் கலந்துகொண்டாலும், இதன் பின்னணியில் மதவாத அரசியல் சக்திகளின் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி நடவடிக்கைகள் உள்ளன என்பது தெளிவாக வெளிப் பட்டது.