கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் தொகரப்பள்ளியில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஆங்காங்கே விரிசலடைந்து இடிந்து விழும் நிலையிலும், மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகிகொண்டும் உள்ளது. ஏற்கனவே இந்த கட்டிடத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து பராமரித்த தாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த காப்பகத்தை சீர மைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.