பாலக்காடு,மார்ச் 3- பாலக்காடு நகரம் பிஓசி சாலையில் சிறுபாலம் மற்றும் சாக்கடை கால்வா ய்க்காக நகர சாலைகள் மூட ப்பட்டுள்ளதால் 5 கிலோ மீட்டர் வரை மக்கள் ஊர் சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. பிஓசி சாலையில் சிறுபா லம் கட்டுவதற்காக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நக ரத்தை சுற்றி செல்ல வேண்டும். போக்குவரத்து மாற்றங்கள் என்னவென்று தெரியாததால் நகர த்தில் வசிப்பவர்கள் குழப்ப மடைந்தனர். விக்டோரியா கல்லூரி அருகில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்தை அடைய, ஒரு வர் ஐந்து கிலோமீட்டர் சுற்ற வேண்டும். இதனால் சுல்தான்பேட்டை மற்றும் ஸ்டேடியம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்டுமான பணி களுக்காக டவுண் ரயில் நிலைய மேம்பாலத்திலி ருந்து பிஓசி சாலைக்கு செல்வது தடை விதிக்கப்ப ட்டுள்ளதால் இந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. பாலத்திலும் பிஓசி சாலையிலும் 3 இடங்க ளில் போக்குவரத்து காவல்து றையினர் தடுப்புகளை ஏற்ப டுத்தியுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுப்பப்படு கின்றன. ஆட்டோ முதல், பெரிய வாகனங்கள் வரை சுல்தான்பேட்டை வழியாக செல்ல வேண்டும். ஒலவக்கோட்டிலிருந்து சுண்ணாம்புத்தர வழியாக வரும் கேஎஸ்ஆர்டிசி பேரு ந்துகள் பேழுங்கரா புறவ ழிச்சாலையை பயன்படுத்தி நிலையத்தை அடைய வேண்டும். டிபி சாலை வழி யாக வரும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களுக்கு மட்டுமே பிஓசி சாலையை அணுக முடியும். போக்குவரத்து கட்டுப்பா ட்டுக்காக பிஓசி சாலை யில் போக்குவரத்து காவல்து றையினர் நிறுத்தப்பட்டுள்ள னர். இந்த சாலை 30 நாட்க ளுக்குள் முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் போக்குவரத்து காவல்துறை யினரிடம் தெரிவித்துள்ளது.