tamilnadu

img

தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு - கேரள அரசு அறிமுகம்

தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக மகப்பேறு சட்டத்தின் கீழ், தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும், பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு காலத்தில், 26 வாரங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் குழந்தை பிறக்கும் வரை மாதம் ரூ.1000 மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட வேண்டும் என்று கேரள அரசு கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி மாநில அமைச்சரவையில் கூடி முடிவெடுத்தது. கேரள அரசின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கேரள அரசின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.