திருவனந்தபுரம், ஆக.2- கேரளத்தில் சனியன்று 1129 புதிய கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதில் 864 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டது. 58 பேருக்கு நோய் தொற்றிடம் தெரியாது. 864 பேர் குணமடைந்தனர். சனியன்று கேரள சுகாதாரத்துறை வெளி யிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது: சனியன்று கோவிட் உறுதி செய்யப்பட்ட தில் 89 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 114 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 24 சுகாதாரத்துறை ஊழியர் களுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப் பட்டது. சனியன்று 8 பேர் உயிரிழந்தனர். இதுவரை மாநிலம் முழுவதும் 81 பேர் கோவிட்டுக்கு உயிரிழந்தனர். தற்போது 10,862 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கோவிட்டிலிருந்து 13,779 பேர் குணமடைந்தனர். பல்வேறு மாவட்டங்க ளில் 1,43,996 பேர் இப்போது கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,33,616 பேர் வீடுகள்/ நிறு வனங்களிலும் 10,380 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். சனியன்று 1257 பேர் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டனர். சனியன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,518 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னுரிமை பிரிவினர் உட்பட இதுவரை மொத்தம் 7,95,919 மாதிரி கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் 5971 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. சுகாதாரத்துறையினர், பொது நல ஊழியர்கள், வெளிமாநில தொழிலா ளர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 1,24,653 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 1842 முடிவுகள் நிலுவையில் உள்ளன. வெள்ளியன்று 17 கட்டுப்பாட்டு பகுதிகள் புதியதாக உருவாகின. 23 பகுதிகளில் கட்டுப் பாடுகள் விலக்கப்பட்டன. தற்போது மொத் தம் 492 பகுதிகளில் கட்டுப்பாடுகள் உள் ளன.