கரூர், மார்ச் 17- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், போக்குவரத்துக்கழகம், இந்து சமய அறநிலையத்துறை, கல்லூரி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலு வலர்கள் மற்றும் திரையரங்கு கள், திருமண மண்டபங்கள், உண வகங்களின் உரிமையாளர்களு டனான ஆலோசனைக் கூட்டம் கரூர் ஆட்சியரகத்தில் ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், காய்ச்சல், சளி, தொடர் இருமல், உடல் சோர்வு, ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் ஆகியவை கொரோனா வைரஸ் அறிகுறிகள். இந்நோய் அறிகுறி கள் உள்ள நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் மனிதரி டமிருந்து மனிதருக்கு நேரடியாக பரவுகிறது.எனவே நம்மை சுத்தமாக வைத்துக் கொண்டால் அச்சம் தேவையில்லை என்று ஆட்சியர் கூறினார்.