நாகர்கோவில், ஜூலை 19- நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர் வேத மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையம், குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் உள்ள முகாம், குளச்சல் அரசு மருத்துவமனை, பத்ம நாபபுரம் அரசு தலைமை மருத்துவ மனை ஆகியவற்றை ஞாயிறன்று அமைச் சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் செ. ராஜூ, தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தள வாய் சுந்தரம், ஆட்சியர் பிரசாந்த் மு.வட நேரே உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோட்டார் ஆயூர்வேத மருத்துவமனையில் அனைத்து வசதிகள் கொண்ட 230 படுக்கைகளுடன் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.