காஞ்சிபுரம், ஆக.11 - செய்யாற்றில் மணல் கடத்திலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததோடு, 5 லாரிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 7 வருடங்களாக ஆற்றுப் படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இருப்பினும், ஆற்றுப் படுகையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் லாரிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்று கரை பகுதியில் திங்கட்கிழமை (ஆக.10) நள்ளிரவு ஆற்று மணல் திருட்டில் லாரிகள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாகரல் காவல் உதவி ஆய்வாளர் கிஷோர்குமார் தலைமை யில் காவலர்கள் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 லாரிகளை யும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தோடு, தப்பியோடிய நபர்களையும் தேடி வருகின்றனர்.