சின்னசேலம், ஆக. 23- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைக்கு மேற்கூரை அமைக்க வேண் டும் என பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாம் அமைந் துள்ள இடத்தில் உள்ள ராயர்பாளையம் செல்லும் வழியில் ரயில்வே சுரங் கப்பாதை உள்ளது. இந்த இலங்கை அகதிகள் முகா மில் 75 குடும்பத்தினர் வசிக் கின்றனர். இதன் அருகே சேலம், விருத்தாச்சலம் செல்லும் ரயில் பாதை அமைந்துள்ளது. இந்த முகா மில் வசிக்கும் இலங்கை அகதிகள் குடும்பத்தினரும், அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கா னோர் தினசரி இந்த ரயில் பாதையைத்தான் கடந்து செல்ல வேண்டும். இதனால் அடிக்கடி விபத்து நடைபெறும். அச்சத்துடனே ரயில் பாதையை மக்கள் கடந்த னர். அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஓராண்டிற்கு முன் ரயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. ஆனால் சுரங்கப் பாதைக்கு மேற் கூரை அமைக்கவில்லை. இத னால் மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சுரங்கப் பாதையை கடக்க முடியாமல் மக்கள் அவதிப் பட்டனர். எனவே தற்போது துவங்க உள்ள பருவ மழைக்கு முன்பாக சுரங்கப் பாதையின் மேல்புறம் கூரை அமைத்து, தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.