கள்ளக்குறிச்சி. டிச, 16- கள்ளக்குறிச்சி வட்டம் மாடூர் கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியர் இன மக்களுக்கான சுடுகாட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ள தால் அருந்ததியினர் குடும்பத்தில் இறப்பு நேரிட்டால் உடலை புதைப்ப தற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அருந்ததிய மக்களுக்கான சுடுகாட்டு இட ஆக்கிரமிப்பை அகற்றி அத்து காண்பிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் குறைகேட்பு கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஜி.பாரத்ராம் மனு அளித்துள்ளார். இதேபோல நீலமங்கலம் என்ற இடத்தில் வசிக்கும் குறவர் இன மக்களுக்கு அரசால் முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா இறந்த வர்களின் பெயரில் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது அந்த இடத்தில் வசிக்கும் குறவர் இன மக்கள் எந்தவிதமான அரசின் சலுகை களுக்கும் இதனை பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. எனவே தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கான பட்டாவை தங்கள் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் எனக்கோரி குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் நேரில் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.