நாமக்கல், செப்.17- சாதி மறுப்பு திருமணம் செய் ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாதிக் கப்பட்ட தம்பதியினர் திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி யைச் சேர்ந்த முத்துசாமி, கீதா ஆகியோர் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக, இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ப தால் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த னர். தற்போது, இத்தம்பதியின ருக்கு ஒருமகனும், மகளும் உள்ள னர். இதற்கிடையே, இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருடன் ஊரில் உள்ளவர்கள் யாரும் பேசுவது, பழகுவது, திருவிழாக்கள் மற்றும் குடும்ப விசேஷங்களுக்கு அழைக்கக்கூடாது என கட்டுப் பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முத்துச்சாமி கோவில் பூசாரியாக இருந்து வந்த நிலை யில், அவர் சாதி மறுப்பு திரு மணம் செய்து கொண்டதால் கோவிலுக்கும் வரக்கூடாது என வும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். தற்போது வாடகை வீட்டில் குடி யிருந்து வரும் சூழலில், குடியி ருக்கும் வீட்டையும் காலி செய் யச் சொல்லி வீட்டின் உரிமையாள ரிடம் இவ்வூரைச் சேர்ந்தவர் நிர் பந்தித்து வருவதாக கூறப்படுகி றது. இந்நிலையில், வாடகைக்கு வீடுகள் விடப்படாத நிலையில், ஊரில் எவ்வித தொடர்புகளும் வைத்துக் கொள்ளாததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள் ளேன். ஆகவே, நான் ஏற்கனவே பூஜை செய்து வந்த கோவிலில் பூஜை செய்ய அனுமதி வழங்க வேண்டும். கோவில் நிலத்தில் குடியிருக்க வீட்டுமனை ஒதுக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனக்கோரி திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முத்துச்சாமி, கீதா தம்பதியினர் மனு அளித்தனர்.