tamilnadu

img

மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர், பிப்.19- பாஜகவின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ) ஆகிய இடது சாரி கட்சிகள் சார்பில் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தின் முன்பு புத னன்று (பிப்.19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்கினார். சிபிஐ ஒன்றியச் செயலாளர் கே.ரவி, சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.ராஜ வேல், சிபிஐ(எம்எல்) நகர பொறுப்பாளர் ஜி.லோக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, சி.பி.ஐ(எம்.எல்) கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.செந்தில், நகர செயலாளர் கே.விஜய குமார், சிபிஐ துணைச் செய லாளர்கள் ஆ.சௌரிராஜன், கே.ராமசாமி, சிபிஐ(எம்எல்) விழுப்புரம் தொகுதி செயலா ளர் டி.கலியமூர்த்தி, பகுதி செயலாளர் ஏ.செண்ப கவல்லி உள்ளிட்ட ஏராள மானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்