உளுந்தூர்பேட்டை, ஆக. 13- மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும், ரத்த வங்கியில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு ரத்தம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்ககைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உளுந் தூர்பேட்டையில் தர்ணா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்து வமனையில் நடைபெறும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழியர்கள் மீது காழ்ப்பு ணர்ச்சியுடன் நடந்துகொள்ளும் தலைமை மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனோ வார்டு தனியாக அமைக்க வேண்டும், அவசர சிகிச்சை நோயாளிகளுக்கும், புறநோயாளிகளுக்கும் தடையின்றி சிகிச்சை அளிக்க வேண்டும், கொரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளையும் ஈடு படுத்த வேண்டும், மருத்துவமனையில் அனைத்து உபகரணங்கள் மற்றும் மருந்துவப் பொருட்களையும் போதுமான அளவு கையி ருப்பு வைத்திருக்க வேண்டும், நோயாளிகளி டம் வெளியில் மருந்து வாங்கி வரச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்டப்பொருளாளர் வழக்கறிஞர் வி.மார்த்தாண்டன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி, செல்வராஜ், மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செய லாளர் வே.ஏழுமலை, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ தேவி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் நிர்வாகி கள் சதீஷ்குமார், ராமராஜன், தங்கமணி, ராஜீவ்காந்தி, ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.