tamilnadu

img

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

காட்டுமன்னார்குடி பேரூராட்சி ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாகிறது.  இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும்  பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வில்லை. நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காலி குடத்துடன் குடிநீர் பைப் அருகே மாவட்டச் செயலாளர் தேன்மொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.