கடலூர், அக்.3- பண்ருட்டி ஒன்றியம் திரு வாமூர் ஊராட்சி காமாட்சிப் பேட்டை கிராமத்தில் அடிப் படை வசதிகளை செய்து தரக் கோரி நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதனையறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தன் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. காமாட்சிப் பேட்டை கிரா மத்திற்கு குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, சுடு காடு வசதி போன்ற அடிப் படை வசதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நட வடிக்கையும் எடுக்க வில்லை. சேறும் சகதியும், குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றி யக் குழு உறுப்பினர் கே.வட மலை தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில் கிளைச் செயலாளர் கே.ஐயப்பன், எஸ்.செல்ல முத்து, ஜி. சண்முகம், கே.ஏழுமலை, கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.திரு அரசு, விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.கே.ஏழுமலை உள்ளிட்ட பலர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச் சந்திரன், புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ரேவதி, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி எழுத்தாளர் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். சிமெண்ட் சாலை அமைக்க ரூ.1.45 லட்சம் நிதி ஒதுக்கீடு ஒதுக்கியிருப்பதாக வும் விரைவில் பணி செய்து முடிக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்தனர். 100 நாள் வேலை தொடர்ந்து கிடைத்திடவும், சம்பள பாக்கி முழுமையாக வழங்க வும் நடவடிக்கை எடுக்கப்ப டும் எனவும் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்தன் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.