tamilnadu

img

ரேசன் கடையில் தரமான அரிசி கேட்டு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், ஜூலை 25- காட்டுமன்னார்குடி வட்டம் ராயநல்லூர் ஊராட்சியில் உள்ள ரேசன் கடையில் 550 ரேஷன் கார்டுகள் உள்ளன.  இந்த ரேஷன் கடையில் 25 தேதி ஆகியும் இதுவரை சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் அரிசி துர்நாற்றம் அடிக்கிறது எனக்கூறி  வாங்க மறுத்துள்ளனர். மேலும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். பின்பு வட்ட வழங்கல் அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தரமான அரிசி போட வேண்டும் என வலியுறுத்தினர். தரமான அரிசி போடப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணைச் செயலாளர் சந்திரன், துணைத் தலைவர் குமார், நிர்வாகிகள் சித்ரா, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.