ஜெய்ப்பூர், ஜூலை 4 - ராஜஸ்தான் சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளன்று அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பல்வான் பூனியா ஈர்த்தார். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட உடையை அணிந்து அவர் சட்டமன்றக் கூட்டத்திற்கு வந்தார். விவசாயிகளின் தற்கொலைகளைப் பதிவு செய்ய மறுக்கும் ராஜஸ்தான் அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய விவசாயிகள் சங்கமும் குரல் எழுப்பி வருகின்றன. சட்டமன்றத் தேர்தலின்போது விவசாயிகளின் கடன் பற்றிய வாக்குறுதியை காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு முழுமையாக நிறை வேற்றவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிடா விட்டால், விவசாயிகள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய விவசாயிகள் சங்கமும் எச்சரித்துள்ளன.