tamilnadu

img

குரூப் 2 தேர்வுக்கு புதிய பாடத் திட்டம்: அமைச்சர் விளக்கம்

சென்னை, செப்.29- குருப் 2 தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு ள்ளதாகவும், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக போராட்ட அறிவிப்புக ளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இதுவரை குரூப் 2 தேர்வில் ஆங்கிலம் படித்தவர்கள் 60 சதவீதமும், தமிழ் படித்தவர்கள் 40 சதவீதம் மட்டும் தேர்ச்சி பெற்றதாகத் தெரிவித்தார். முந்தைய பாடத்திட்டத்தில் பொது அறிவு என்ற ஒரு பிரிவு இருந்ததாகக் கூறிய அவர், அதனை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. இந்நிலையில், ஆங்கிலத்தை தேர்வு செய்து அதிக அளவில் தேர்வாகிச் சென்றதாகத் தெரிவித்தார். ஆனால் 300 மதிப்பெண்களுக்கான முதல் நிலைத் தேர்வில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.