tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எப்போது?

சென்னை, நவ.2- தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக உள்ளாட்சி தேர்தல் நடை பெறாமல் உள்ளது. இந்த ஆண்டு  டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்  தல் நடத்தி முடிக்கப்படும் என்று  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தி ருந்தார்.  ஆனால் மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் அல்லது  ஜனவரி மாதம் தேர்தல் நடத்த லாமா என்று ஆலோசித்து வருவ தாக கூறப்படுகிறது. அதற்கேற்ப உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் அட்டவணையை சமர்பிக்க 4 வார  கால அவகாசம் கேட்டுள்ளனர். தற்போது வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்ப்பது, நீக்குவது,  திருத்தம் போன்ற பணிகளை முடித்து, வாக்காளர் பட்டியலை  இறுதி செய்யும் பணியில் உள் ளது. அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தேர்தல் அதி காரிகளை நியமிப்பது தொடர் பான நடவடிக்கையிலும் மாநில  தேர்தல் ஆணையம் ஈடு பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். கிராம பஞ்சாயத்துக்களை பொறுத்தவரை ஓட்டு சீட்டு முறை யில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு  செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஓட்டு சீட்டு அச்சடிக்கும் காகிதம் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. அதன்படி காகிதம் கொள்முதல் செய்யப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. மின்னணு எந்திரங்களை கையாள்வது, தொடர்பாகவும் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழி யர்கள் பெயர் விவரங்களும் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு வாரியாக பட்டியல் தயா ரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கு அரசு ஊழி யர்கள் ஆசிரியர்களை முழுமை யாக பயன்படுத்தவும் தேர்தல்  ஆணையம் முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடுபடி பட்டியலும் தயா ரிக்கப்பட்டு முடிவு பெறும் தருவா யில் உள்ளது. உள்ளாட்சி அமைப்பின் 5 அடுக்கு முறைக்கு தேர்தல் நடை பெறும்போது 1 லட்சம் காவ லர்கள் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதை  செய்து கொடுக்க அரசும் ஒப்புதல்  தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான ஆரம்ப கட்ட  பணிகள் அனைத்தும் முடிவு பெறும் நிலையில் இருப்பதால் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலுக் காக வேட்புமனு தாக்கல் செய்யும் நாள், ஓட்டுப்பதிவு நாள்,  ஓட்டு எண்ணிக்கை நாள் ஆகிய வற்றை அட்டவணைப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் 1 வாரத்தில்  தாக்கல் செய்யும் என தெரி கிறது.