tamilnadu

img

குழந்தைகளை காவு கேட்கும் கல்விக் கொள்கை!

லைஞர் ரோகிணி பேச்சு திருச்சி, ஆக.24- திருச்சியில் நடைபெற்ற தமுஎகச-வின் கல்வி உரிமை மாநாட்டில் திரைக்கலைஞரும், தமுஎகச மாநில துணைத் தலைவருமான ரோகிணி பேசியது: பூமியின் இதயமாக உள்ள அமேசான் காடு களை உலகத்தின் ஒரு பகுதியில் எரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் அடுத்த சந்ததியினரின் வாழ்க்கையை எரிப்ப தற்கான எல்லா வேலைகளும் நடந்து கொண்டு இருக்கிறது.  தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். அவர்களோ, பள்ளிகளை மூடி ஒரே வளாகத்திற்குள் இணைக்கும் நடவடிக்கையை ஏற்கனவே செய்யத் தொடங்கி விட்டனர். நீ செருப்புத் தான் தைக்க வேண்டும். தச்சு வேலை தான் செய்ய வேண்டும் என்று உத்தரவு போடும் கல்வி முறையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?  அரசாங்கம் எது செய்தாலும் நல்லது தான் செய்யும் என்று மக்கள் நம்பு கின்றனர். குழந்தைகள் பெற்றோரைப் பார்ப்பது போல மக்கள் அர சாங்கத்தை ஏற்று இருக்கிறார்கள். அரசாங்கமோ அதற்கு நேர் மாறாக இருக்கி றது. கல்வி முறை குழந்தைகளின் அச்சத்தைப் போக்கும் படியாக இருக்க வேண்டும். குழந்தைகளை காவு கேட்கும் இந்த கல்விக் கொள்கையை நாம் எரித்தால் தான் என்ன?

இந்த ஒலி பெருக்கி வீதிக்கு போக வேண்டும்

தன்னை மீறி ஒன்றைச் செய்யும் போது அது கலையாக மாறுகிறது. குழந்தை கள் அம்மாவிடமிருந்து எல்லாவற்றையும் கலையாகவே கற்றுக் கொள்கிறது. கல்வி முறையும் ஒரு கலையாகத் தான் இருக்க வேண்டும். அன்பு செலுத்து வதற்கு அதிகாரம் தேவையில்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்களோ அதிகாரம் தன் கையில் இருப்பதால் அவர்களுக்கு ஊழியம் செய்து கொண்டே இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழில் வந்து விட்டது தெரியுமா என்று ஆந்திர மக்களிடம் சொன்ன போது வியப்பாகப் பார்க்கின்றனர். இந்தக் காலக் கட்டத்தில் கதை, கவிதை, சினிமா, குறும்படங்கள் மூலமாக இது குறித்த விழிப்புணர்வை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிறைய எழுத வேண்டும். படைக்க வேண்டும். பேச வேண்டும். இந்த ஒலி பெருக்கி அரங்கத்தை விட்டு வெளியே போக வேண்டி யிருக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் இது நடந்தால் தான் நமது கலைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அப்படி நடந்தால் நான் ஒவ்வொரு வீதியாக வந்து நடிக்க காத்திருக்கிறேன்.

கலை ஆயுதமாக மாறும்
பிரச்சனை பெரும் அலையாக உருவெடுக்கும் போது அதற்கான விலை யை ஆட்சியாளர்கள் கொடுத்தே ஆக வேண்டும். எங்கிருந்தோ ஒரு பொறி வரப்போகிறது. அப்படி ஒரு பொறியை வருவதற்கான தைரியத்தை நாம் ஊட்டிக் கொண்டே இருப்போம். நாம் துவண்டு விடப் போவதில்லை. தோற்று விடப் போவதில்லை. தோற்றுப் போக விட மாட்டோம். பாதிக்கப்பட்டவர்கள் மிகப் பெரிய ஆயுதமாக மாறுவார்கள். அவர்களின் கலையும் மிகப் பெரிய ஆயுதமாக மாறும் என்றார்.