நாகப்பட்டினம், நவ.12- நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், அருந்தவப்புலம் தோழர் வே.மீனாட்சி சுந்தரம் ஏழாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை அன்று அருந்தவப்புலத்தில் நடைபெற்றது. வி.எம்.எஸ். என அழைக்கப்பட்ட தோழர் வே.மீனாட்சி சுந்தரம், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்று பட்ட நாகை வட்டச் செயலாளராக வும் தலைஞாயிறு ஒன்றியச் செயலா ளராகவும் வெண்மணி வீரத் தியாகி களின் போராட்டத் தளபதியாகவும் உழைக்கும் மக்களின் உரிமைக ளுக்காகப் பல்வேறு வீரம் செறிந்த போராட்டக் கள வீரராகவும் திகழ்ந்த வர். 21 மாதங்கள் இயக்கத் தலைவர்க ளோடு கடலூர் மத்தியச் சிறையில் இருந்தவர். 2012, நவம்பர்-12 அன்று இயற்கை எய்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைஞாயிறு ஒன்றியம் மற்றும் நாகமங்கலம் கிளை சார்பில் வி.எம்.எஸ். நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அருந்தவப்புலத்தில் மீனாட்சிசுந்தரம் இல்லத்தின் அருகில் உள்ள கல்வெட்டுக் கொடிக் கம்பத் தில், சி.பி.எம். மாவட்டச் செயலாள ரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான நாகைமாலி செங்கொடியை ஏற்றி வைத்து, மீனாட்சிசுந்தரம் உரு வப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மீனாட்சி சுந்த ரத்தின் துணைவியார் மீ.காசியம் மாள், அவரது குடும்பத்தினர் மற்றும் இயக்கத் தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
அருந்தவப்புலம் கடைத்தெரு வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அங்கு கொடிமேடையில் அமைக்கப் பட்டிருந்த வி.எம்.எஸ். உருவப் படத்தை மாவட்டச் செயலாளர் நாகை மாலி திறந்து வைத்து மாலை அணிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நினைவு அஞ்சலிப் பொதுக் கூட்டத்திற்கு நாக மங்கலம் கிளைச் செயலாளர் ஏ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். சி.பி.எம். தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் என். முருகையன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.செல்லை யன், சி.ஐ.டி.யு. ஒன்றியப் பொறுப் பாளர் கே.அலெக்சாண்டர், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் டி.அருள் தாஸ், ஒன்றியத் தலைவர் ஏ.ராஜா மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் ஜி.செல்வராஜ், வி.தனபால், எம். ஜவகர்லால், ஏ.காளியப்பன், எம்.ஆறுமுகம், எஸ்.சித்திரவேல் உள் ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி நிறை வுரையாற்றினார். எம்.பி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.