சென்னை,ஏப். 4- கொரானா வைரஸ் தொற்றால் வியாபாரம் செய்யமுடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சிறுவியாபாரிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும் என சென்னை நகர சிறுவியா பாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. சென்னை நகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுகடைவியாபாரிகள் தலை முறை தலைமுறையாக சுயவேலைவாய்ப்பு அடிப்படையில் சமூகத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரு கிறார்கள்.
சிறிய வகை ஆயத்தஆடைகள், துணி வகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், மின்சாதனப்பொருட்கள், தேனீகடைகள், உணவு கடைகள் விற்பனை செய்பவர்கள் தற்போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகி விட்டனர். இதுபோன்று தமிழகத்தின் முக்கிய நக ரங்களான திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி போன்ற நகரங்களில் சுமார் 5 லட்சம் பேர் இந்த தொழி லில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்காரணமாக அரசு வேண்டுகோளின் படி சிறுகடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. 21 நாட்களுக்கு யாரும் தொழில் செய்ய முடியாது இதனால் இந்த தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரவியாபாரிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு நடைபாதை வியாபாரி களுக்கு ரூ 2000 நிவாரணம் அறிவித்துள்ளது வரவேற்கதக்கது தான் ஆனால் இது போதாது. அன்றாடம் காய்ச்சியான இம்மக்க ளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு தமி ழக முதலமைச்சரை சங்கம் கேட்டுக்கொண் டுள்ளது. சாலையோர சிறுகடை வியாபாரி கள் குடும்பத்திற்கு ரூ 10ஆயிரம் வழங்க வேண்டும், இதை உள்துறையும், தமிழக முதல்வரும் பரிசிலனை செய்து மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் உரியவர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தவேண்டும் என சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.அபு தாகீர் கேட்டுக்கொண்டுள்ளார்.