சென்னை,அக்.14- உள்ளூர் பால் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்கிற பால் வளத்துறையின் உத்தரவை திரும்பப்பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தர சன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- தொடக்க நிலை பால் உற்பத்தி யாளர்கள் சங்கங்களில் கொள் முதல் செய்யப்படும் பால் முழு வதையும் ஒன்றியங்களுக்கு கொடுத்துவிட வேண்டும், உள்ளூர் பால் விற்பனை செய்யக் கூடாது என பால்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இது பொது மக்களுக்கு கடுமையான பாதிப்பு களை ஏற்படுத்தியுள்ளது.
தாராளமாக பால் உற்பத்தி செய்யும் காலங்களில், பால்வள ஒன்றியங்கள் தொடக்க நிலை சங்கங்களில் பால் கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, உள்ளூர் பால் விற்பனையை அதிகப்ப டுத்தும்படி நிர்பந்திப்பதும், பால் உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்து விடும் காலங்களில் உள்ளூரில் விற்பனை செய்யக் கூடாது என தடை விதிப்பதும் கடுமையான முரண்பாடாகும். பால் நுகர்வோர் தொடர்ந்து ஒரே இடத்தில் பால் வாங்கு வதையே விரும்புவார்கள் என்பது இயல்பானது என்பதை பால்வளத்துறை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பால் உற்பத்தி யாளர்கள் தொடக்கநிலை கூட்டு றவு சங்கங்கள் உள்ளூர் விற்பனை செய்யக்கூடாது என தடை விதித்து பால்வளத்துறை வெளி யிட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.