ஈரோடு:
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப் படாது என்றும் செப்டம்பர் மாதம் கடைசி வரைஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப் படாது. இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள்அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சிஅளிக்கிறது. கடந்த ஆண்டை விட அதிக மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்தமாதம் கடைசி வரை நடைபெறும். பெற்றோர் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கபடையெடுத்து வருகிறார்கள்.நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அரசின் கொள்கை முடிவு. நாளை 238 மையத்தில் நீட் தேர்வுநடைபெறுகிறது. இதனை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுதுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.