tamilnadu

img

சத்தியமங்கலத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை மரணம்!

சத்தியமங்கலத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் - பண்ணாரி சாலை அருகே பெண் யானை ஒன்று நிற்க முடியாமல் படுத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. உடனடியாக யானைக்கு சிகிச்சையளிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் வனத்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து வந்து யானையை பரிசோதித்தனர். அந்த யானையுடன் பிறந்து 2 மாதங்களே ஆன யானை குட்டி ஒன்று சுற்றி வந்ததால், அந்த குட்டி சற்று தொலைவில் அழைத்து செல்லப்பட்டு வனத்துறையினர் பராமரிப்பில் வைக்கப்பட்டது. இதை அடுத்து பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால்  அந்த யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.