தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16 வது மாநில மாநாடு
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) 16வது மாநில மாநாடு பொன்விழா மாநாடு 2019 ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நெல்லையில் நடைபெற வுள்ளது. இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) துவங்கப்பட்ட அதே ஆண்டான 1970ல் தமிழக மின்வாரியத்தில் நவம்பர் 14ல் மதுரையில் முதல் மாநாடு நடைபெற்று மத்திய அமைப்பு உருவாக்கப்பட்டது. முதல் மாநாட்டில் தலைவராக தோழர் சி.கோவிந்தராஜ னும், பொதுச் செயலாளராக தோழர் து.ஜானகிராமனும், பொருளாளராக தோழர் வி.மீனாட்சி சுந்தரமும், துணைத் தலைவராக தோழர்கள் வி.பி.சிந்தன், கே.ரமணி, பி.சி. வேலாயுதம், ஐ.தங்கராஜ் ஆகியோரும் செயலாளராக ஏ.நல்லசிவன், கே.ஜானகிராமன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழக மின்சார வாரியத்தின் அடிப்படை கட்டமைப்பு பணிகள், மின் உற்பத்தி மற்றும் கிராமப்புறங்களில் மின்மய மாக்கும் பணிகள் வெகுவேகமாக மேற்கொள்ளப்பட்ட காலத்தில் நடைபெற்ற தினக்கூலி தொழிலாளர்களின் போராட்டம், மத்திய அமைப்பின் வரலாற்றில், மிகப்பெரிய முத்திரையைப் பதிவு செய்தது. ஆம்! அன்று ஆரம்பித்த போராட்டம் இன்று வரை ஓய வில்லை! அத்தக் கூலியாக இருந்த ஒப்பந்த ஊழியர்களை யும் நிரந்தர ஊழியர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஆர்ப்பாட்டம், மறியல், வேலை நிறுத்தம் என பல கட்ட போராட்டங்களை நடத்தி இன்று வரை 72,000த்திற்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் படுத்திய அமைப்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு. மத்திய அமைப்பின் போராட்ட வரலாற்றில் ஒப்பந்த ஊழியர்களுக்காக தோழர் பி.சி.வேலாயுதம் அவர்கள் துவக்கி வைத்த போராட்டம் தமிழக முழுவதும் ஒப்பந்த ஊழியர்களின் மனதில் நம்பிக்கையை எற்படுத்தியது.
கோவை மாவட்டத்தில் அணைக்கட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்கமும் போராட துவங்கியது. தோழர் கே.ரமணி தலைமையில், கே.சி. கருணாகரன், வி.துளசி தாஸ் ஆகியோர் தோழர் வி.பி.சிந்தன் வழிகாட்டுதலில் கடுமையான போராட்டத்தையும் அடக்குமுறையையும் எதிர்கொண்டு சிறைச்சாலையில் ஆண்களும், பெண்களு மாய் அடைக்கப்பட்டனர். போராட்டத்தின் வீச்சை உணர்ந்த கோவை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் எம்.பூபதி அவர்கள் தோழர் கே.ரமணியோடு இணைந்து போராடி அன்றைய முதல்வர் அண்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தினார். அந்த ஒப்பந்தத்தின் விளைவாக, வேலை நீக்கம் செய்யப்பட்ட 277 பேர் பல்வேறு திட்டங்களில் வேலை பெற்ற னர். வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்ல விருப்ப மில்லாத 202 ஊழியர்கள் இழப்பீடும் பெற்றனர். இதற்காக பிறப்பிக்கப்பட்ட வாரிய உத்தரவை அன்று சென்னை பொது மருத்துவமனையில் உடல்நலம் பாதிப்பு அடைந்த காரணத்தால் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர் எம்.பூபதி அவர்களிடம், வாரிய அதிகாரிகள் நேரிலேயே வழங்கிய வரலாற்றை உருவாக்கி தந்தவர்கள் நமது தலைவர்கள்: வி.துளிசிதாஸ், கே.சி.கருணாகரன். ஆண்டம்மாள், கே.ராம சாமி உள்ளிட்ட பல தோழர்கள் இந்த பேராட்டத்தின் தியாக சீலர்களில் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த நமது தலை வர்கள் பழிவாங்கல் நடவடிக்கை. டிஸ்மிஸ், சஸ்பென்ட், சிறைக்கைதிகளாக பல மாதங்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு, இன்னல்களை தாங்கி இந்த அமைப்பை பலப்படுத்தியுள்ளார்கள். நிரந்தர ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகள், போனஸ், ஊதிய உயர்வு, பதவி உயர்வு என அனைத்து பிரச்ச னைகளிலும், மின் ஊழியர் மத்திய அமைப்பு தலையீடு செய்து, ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற அமைப்பு. மத்திய அரசு, புதிய பொருளாதாரக் கொள்கையை 1991ல் அமல்படுத்திய நிலையில் மின்துறையில் 2003ல் அமல்படுத்த ஆரம்பித்தபொழுது கடுமையாக எதிர்த்துப் போராடி வருவது மத்திய அமைப்பு மட்டுமே. மின்சார சட்டம் 2003, மின்சார சட்டதிருத்த மசோதா 2018 ஆகியவற்றை எதிர்த்து தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து போராடி வருகிறது.
மின்சாரம் தனியார் மயமானால் மின்சாரம் சந்தைப் பொருளாக மாறும்! வசதியுள்ளவனுக்கே மின்சாரம் என்ற நிலை உருவாகும்! தேசம் சுதந்திரம் அடைந்த பொழுது மின்சார துறையைய மாநிலங்களிடம் இருக்க வேண்டும், அப்பொழுது தான் தொழில் வளர்ச்சி அடையும் என வலி யுறுத்தி அமல்படுத்திய சுதந்திர இந்தியாவின் முதல் மின்துறை அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கரின் எண்ணமும் செயலும் நயவஞ்சக கார்ப்பரேட் ஆதரவு மத்திய அரசின் செயலால் அழிக்கப்பட்டு வருவதை இந்திய மின் ஊழியர் கள் அனுமதிக்க மாட்டார்கள் என வீரஞ்செறிந்த போராட்டத் தை இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு (EEFI) உடன் நடத்தி வருகிறது தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு. தனியாரை மின்துறையில் உற்பத்தியில் விநியோ கத்தில் ஈடுபடுத்திட துடியாய் துடித்து வருகிறது. பாஜக அரசு. தனியாரை ஈடுபடுத்தினால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் அபாயம் உள்ளது. தெருவிளக்கு, குடிநீர், மோட்டார் ஆகியவைகளின் பயன்பாடு கேள்விக் குறியாகும்.
மின்வாரியத்தில் உற்பத்தியை நிறுத்தி, தனியாரிடம் நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்ப டையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி வருகிறது. தமிழக அரசும், வாரியமும்! இதனால் சுமார் ரூ. 7500 கோடி நஷ்டம் ஏற்பட்டு இந்த ஆண்டு இறுதியில் அது பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் மின்வாரிய ஊழியர்கள் மட்டும் போராடினால் போதாது; மின் நுகர்வோர்களும் பொது மக்களும் விவசாயிகளும் இணைந்து போராட வேண்டும். அதற்கான களத்தை உருவாக்குவதோடு மின் ஊழியர்க ளின் பணிக் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்; லஞ்ச லாவண்யங்களுக்கு அப்பாற்பட்ட வர்களாக மத்திய அமைப்பின் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது மத்திய அமைப்பு.
வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல் என அனைத்து இயற்கைச் சீற்றத்திலும் பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களுக்கான பல லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்க ளை வழங்கியது மத்திய அமைப்பு. கடந்த ஆண்டு கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில், தொழிற்சங் கங்களை இணைத்து ஒருநாள் சம்பளத்தை பிடித்து கேரளாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தது மத்திய அமைப்பு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கே.தொட்டியம் பட்டி கிராமத்தில் ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் சொன்னது மத்திய அமைப்பு. ஜல்லிக்கட்டு இயக்கம், ஜாக்டோ ஜியோ போராட்டம், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் ஆகிய போராட்டங் களுக்கு ஆதரவாக ஆதரவு போராட்டங்களை நடத்திய அமைப்பு மத்திய அமைப்பு.
மின்வாரியத்தில் களஉதவியாளர் பணிக்கு தேர்வு செய்யும் ஐ.டி.ஐ. படித்த பணியாளர்களுக்கு 9 மையங்க ளில் பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வைத்துள்ளது. மின் ஊழியர்களின் பொ ருளாதார கோரிக்கைகளுக்கு மட்டும் போராடும் இயக்கம் அல்ல மத்திய அமைப்பு. பன்முகத் தன்மை வாய்ந்த பணிகளிலும் மத்திய அமைப்பின் உறுப்பினர்களை ஈடு படுத்தி சமூக, கலாச்சார மாற்றத்திற்காக போராளிகளாக மாற்றியுள்ளோம் என்பதில் எங்களுக்கு பெருமையே!
கடந்த 49 ஆண்டுகளாக, மின்வாரியத்தில் பணி யாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள், நிரந்தர தொழிலாளர்கள் இவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்த மத்திய அமைப்பின் 16வது மாநாடு நெல்லையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பி மக்கள் சேவையை தொடர்ந்திட, பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தப்படுத்திட போராட்ட வியூகம் வகுக்க விவா திப்போம்! திட்டமிடுவோம்! களம் அமைப்போம்! இந்த மாநில மாநாட்டை தமிழகம் முழுவதும் மக்களி டையே, நுகர்வோர்கள் மத்தியிலும், மின் ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய, கடந்த 15வது மாநில மாநாடு நடைபெற்ற திருவண்ணாமலையில் ஸ்தாபகத் தலைவர் தோழர் டி.ஜானகிராமன் நினைவுச் செங்கொடியை மாநில நிர்வாகிகள் டி.பழனிவேல், காங்கேயன், அம்பிகாபதி ஆகி யோரும் மத்திய அமைப்பின் வரலாற்றில் மறக்க முடியாத தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதியை சென்னை யிலிருந்து மாநில நிர்வாகிகள் ஆர்.ரவிக்குமார், எம்.தயாளன் ஆகியோரும் வெண்மணியின் கண்மணிகள் 44 பேரின் நினைவாக வெண்மணி ஜோதியை மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அகஸ்டின் ஆகியோரும் தலை மையேற்று, நெல்லை நோக்கி கொண்டு வருகின்றனர்.
மாநாட்டுக் கொடிமரம் தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவாக அவரது நினைவிடத்திலிருந்து (கன்னியாகுமரி) மாநில நிர்வாகி எஸ்.அப்பாதுரை தலைமையில் நெல்லை யில் சமர்ப்பிக்கிறது. அதோடு நெல்லையில் மத்திய அமைப்பின் ஸ்தாபத் தலைவர் தோழர் ஏ.நல்லசிவன் நினைவாகவும், மின்வாரிய ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த தோழர்பி.சி. வேலாயுதம் நினைவாக வும் இரு ஜோதி பயணக்குழுக்கள் நெல்லை முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளனர். இன்று (ஆகஸ்ட் 17) மாநில மாநாட்டை இந்திய உழைப்பாளி மக்களின் போராட்டத் தளபதி சிஐடியுவின் பொதுச் செயலாளர் தபன்சென் துவக்கி வைக்கிறார். மின்வாரிய சகோதர சங்கங்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.
நிறைவு நாளான 19ம்தேதி பல்லாயிரக்கணக்கான மின் ஊழியர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிஐடிவின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த பேரணி பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக் கான மின் ஊழியர்களும், அவர்தம் குடும்பங்களும் ஆயிரம் ஆயிரமாய் பங்கேற்போம்! நமது தலைவர்களின் போராட்டத்தாலும், தியாகத்தா லும் உயர்த்தி பிடித்த செங்கொடியை தாளவிடோம் என பறை சாற்றி நெல்லை நோக்கி போர்ப் பரணி பாடி வா தோழா!
கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு