தருமபுரி, மார்ச் 7- வாகனங்களில் உள்ள எல்ஈடி விளக்கு ககளால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விதிகளை புறந்தள்ளி வாகன ஓட்டிகளின் விருப்பத்திற்கேற்றப்படி வாகனங்களில் எல்ஈடி விளக்குகளை பொருத்தி இயக்குகின்றனர். அரசு வாக னங்களிலும் எல்ஈடி விளக்குகள் அதிக ளவில் பொருத்தப்படுகிறது. தனியார் பேருந்துகளை சுற்றியும்,முகப்பு கண்ணா டிகளிலும் எல்ஈடி விளக்குககள் பொருத் தப்படுகிறது. இதேபோல் இரு சக்கர வாகன வைத்தி ருப்பவர்கள் வாகனத்தை சுற்றிலும் எப் பொழுதும் விளக்கு எரியும் வகையில்மாற்றி அமைத்துள்ளனர். இத்தகைய, கண்ணை மந்தமாக்கும் விளக்குகளால் விபத்துகள் ஏற்டுகிறது. இதில் உயிரிழப்பு மற்றும் ஊனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகி றது.இது குறித்து சம்மந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் வாகனங் களை ஆய்வு செய்வதில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே விபத்துகளை ஏற்படுத்தும் எல்ஈடி விளக்கு கள் பொருத்தப்பட்டுள்ள அனைத்து வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதி காரிகள்?