தருமபுரி, செப்.16- எல்ஐசி பொதுத்துறை நிறுவனம் இந்தியா முழுவதும் 40 கோடி பாலிசிதாரர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு எல்ஐசி பிரிமியத்திற்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் பாலிசிதாரர்கள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே பாலிசிதாரர், பொதுமக்கள் நலன்கருதி எல்ஐசி பிரிமி யத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். எல்ஐசி யின் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு கைவிட நாடாளு மன்றத்தில் வலியுறுத்தக்கோரி தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. எஸ் செந்தில் குமாரிடம், அகில இந்திய இன்சூரன் ஊழியர் சங்க கோட்ட இணைசெயலாளர் ஏ.மாதேஸ்வரன் கிளை பொறுப்பாளர்கள் சந்திரமெளலி,மகேந்திரன், உள்ளிட்ட எல்ஐசி ஊழியர்கள் மனு அளித்தனர்.