தருமபுரி, நவ.16- 52 ஆவது தேசிய நூலக வார விழா தருமபுரி மற்றும் கோவை மாவட்ட மைய நூலகத்தில் சனியன்று நடைபெற் றது. தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து 52 வது தேசிய வார விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக புத்தக கண்காட்சி நடை பெற்றது. வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆர்.இலட்சுமிகாந்தன் தலைமை வகித் தார். முதல் நிலை நூலகர் கோ.மாதேஸ்வ ரன் வரவேற்றார். இதில் புத்தக கண் காட்சியை திறந்து வைத்து மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் சி.இராச சேகரன் பேசினார். நூலக உதவியாளர் பி.சரவணன், வாச கர் வட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி, மாணிக்கம் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து ஒருவார காலத்திற்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் பல்வேறு தலைப்புகளில் நடைபெறுகிறது. மேலும் கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடை பெறுகிறது. நிகழ்ச்சியின் நிறைவாக ரத்தினம் நன்றி கூறினார்.
கோவை
கோவை மாவட்ட மைய நூலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பிரிவில் நூலக வார விழா மாவட்ட நூலக அலுவ லர் மு.சக்திவேல் தலைமையில் நடை பெற்றது. மைய நூலகர் பே.இரா ஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பெண்ணிய ஆர்வலர் சுதா திலக்கால் வடிவமைக்கப்பட்ட ‘நிலா வளர்கிறாள்’ என்ற பிரெய்லி புத்தகம் வெளியிடப்பட் டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் இந்நூலைப் பற்றிய விளக் கங்கள் மற்றும் பெண் மாற்றுத்திறனாளி களுக்கான உடலியல் பிரச்சனைகளைத் தவிர்ப்பது, அது தொடர்பான உடற்பயிற்சி முறைகளும் விளக்கப்பட்டன. இவ்விழாவில் மாணவ, மாணவியருக்கு வினாடி வினா, கதை சொல்லுதல் மற்றும் பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவியர், அவர்களின் பெற் றோர் மற்றும் வாசகர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சிடிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து வழங்கினர். நிறை வாக இரண்டாம் நிலை நூலகர் க.இரவிச் சந்திரன் நன்றி கூறினார்.