tamilnadu

img

பத்திரிகையாளர்கள் உதவி 

பென்னாகரம், ஏப்.20- பென்னாகரத்தில் பத்திரிகையாளர்கள் சார்பாக காவல்துறையினருக்கு மருத்துவ தொகுப்பு வழங்கப்பட்டது.

கொரோனா  வைரஸ் தடுப்பு பணியில் அயராது ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு  பென்னாகரம் பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக முகவுரை, கையுறை, சனிடைசர், சோப்  உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் 350 நபர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக பென்னாகரம் காவல் நிலையம், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையம், பாப்பரப்பட்டி, பெரும்பாலை, ஏரியூர், ஒகேனக்கல், காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினரை கவுரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. 
இதில் பென்னாகரம் பத்திரிகையாளர் மன்றத்தில் தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சரவணன், திருமலைவாசன், பெருமாள், துணைச் செயலாளர் குபேந்திரன், செயற்குழு உறுப்பினர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.