தருமபுரி, அக்.20- தருமபுரியில் அதியமான் சமூக வர லாற்று ஆய்வு மையம் சார்பில் சர்வதேச தொல்லியல் தினவிழா சனியன்று நடை பெற்றது. தகடூர் அகழ் வைப்பகத்தில் நடை பெற்ற இவ்விழாவுக்கு ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குனர் முனைவர் தி.சுப்பிரமணியன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செந்தில் முன்னிலை வகித்தார். ஆய்வு மைய துணைத்தலைவர் இரா.சிசுபாலன், பொருளாளர் வெ.ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர்.கி.சம்பத்குமார், நெ.தெ.அறிவுடைநம்பி, வே.விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொல்லியல் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க வேண்டும். தொல்லியல் வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொல்லியல் களப்பயணங்கள் மேற்கொண்டு அவை குறித்து செய்தி மடல் வெளியிட வேண்டும். தொல்லியல் வர லாற்றை ஆவணப்படுத்தி, கல்லூரி மாண வர்கள் மத்தியில் தொல்லியல் கண்காட்சி நடத்துவது என விழாவில் வலியுறுத்தப் பட்டது. விழாவில் தொல்லியல் ஆர்வ லர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். எஸ்.திருநாவுக்கரசு நன்றி கூறினார்.