தருமபுரி, மார்ச் 15- தருமபுரியில் தறிபட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாவு நூல் உள்ளிட்ட உபகர ணங்கள் எரிந்து சேதமடைந்தது. தருமபுரி மாவட்டம், ஜலகண்டாபுரம் மாதர் சங்கம் தெருவில் வசிப்பவர் சவுண்டப் பன் (47). இவர், தனது ஓட்டு கட்டிடத்தில் 4 தறிகள் போட்டு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தறியை நிறுத்தி பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து இரவில் தறிப்பட்டறை யில் இருந்து புகை வருவதை அவ்வழியாக சென்றவர்கள் சவுண்டப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சவுண்டப்பன் பட்டறைக்கு சென்று கதவை திறந்து பார்த் தார். அங்கு தறியில் இருந்த பாவு நூல் நெய்யப்பட்ட சேலைகள் மற்றும் வார்ப்பு கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ வேகமாக பரவியதுடன் மேற்கூரையின் ஓடுகள் வெப்பத்தினால் வெடித்து சிதறியது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப் பிலான தறிகள் எரிந்து சேதமடைந்தது. இச் சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.