நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளை கொண்ட தொட ரின் முதலிரண்டு ஆட்டத்தில் (ஆக்லாந்து) இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், 3-வது டி-20 நியூஸி லாந்து நாட்டின் முக்கிய நக ரான ஹாமில்டனில் புதனன்று நடை பெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவின் (65) அசத்தலான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் ஹமீஸ் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சனின் (95) அசத்தலான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து சமனில் முடித்து வைத்தது. வெற்றியை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 6 பந்துகளில் 17 ரன்கள் குவித்தது. 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின மான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் ஷர்மாவின் அசத்தலான ஆட்டத்தால் 20 ரன்கள் எடுத்து திரில் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது.