பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு, ஜூன் 22- தென்மேற்கு பருவமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாக விளங்கும் பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்க ளாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. கடந்த 8 நாட்களில் அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஞாயிறன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 3072 கன அடியாக இருந்தது. நீர்மட்டம் 89.71 அடியாக வும், நீர் இருப்பு 21.39 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றில் 1400 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட் டம் 90 அடியை நெருங்குவதால் பாசனப்பகுதி விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.