மாணவர் சங்க தாலுகா நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, ஜுன் 16- மாணவர் சங்க ஈரோடு தாலுகா மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு தாலுகா மாநாடு நசி யனூர் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலை வர் நவீன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார். வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி வாழ்த்தி பேசினார். இதில், புதிய தாலுகா தலைவராக பாரத்பாசு, செயலாள ராக சுகுணா மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர்.
வாலிபர் சங்க கிளை அமைப்பு
தருமபுரி, ஜூன் 16 – தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வகுத் துப்பட்டி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு துவக்க விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட துணைத்தலைவர் செ.கார்த்தி கேயன் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் ம. குறளரசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், கிளை தலை வராக அரவிந்குமார், செயலாளராக மணிகண்டன், உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர்.