tamilnadu

img

சிறுவாணி அணையின் நீர்மட்டம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை எட்டியது

சிறுவாணி அணையின் நீர்மட்டம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை எட்டியது

கோவை, ஜூன் 16- கேரளாவில் உள்ள சிறுவாணி  அணையின் நீர்மட்டம் அனுமதிக்கப் பட்ட கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து, உபரி நீர் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மக்களின் குடி நீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. கேரளாவில் உள்ள சிறுவாணி  அணையின் பராமரிப்பு பணிகள் இரு  மாநில அரசுகளாலும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 49 அடி உயரம் கொண்ட  சிறுவாணி அணையின் தற்போதைய நீர்மட்டம் 44 அடி அடியாக உள்ளது.  அணையின் நீர்மட்டம் 44 அடியாக  உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு  தொடர்ச்சியாக நீர்வரத்து இருப்பது டன், மழை பொழிவும் இருந்து வருவ தால் உபரி நீர் மதகுகள் வழியாக திறக்க விடப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர வாய்ப்புள்ளது என்பதால், 500 கியூபிக் மீட்டர் அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கேரள சிறுவாணி ஆற்றில் தண் ணீர் திறந்து விடப்பட்டிருப்பதன் காரண மாக அட்டப்பாடி மற்றும் பவானி கரை யோரங்களில் வசிக்கும் மக்கள் எச் சரிக்கையாக இருக்கும்படி கேரள பேரி டர் மேலாண்மை ஆணையம் அறிவித் துள்ளது. கேரளாவில் உள்ள அணை களின் முழு கொள்ளவில் 5 அடிக்கு குறைவாகவே தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என்ற  விதிமுறை இருப்ப தால், 49 அடி உயரம் கொண்ட சிறு வாணி அணையில் 44 அடியினை எட்டிய நிலையில் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிரம்பியது பில்லூர் அணை கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த  சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந் தது. நூறு அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் ஞாயி றன்று காலை (15 ஆம் தேதி) 82 அடி யாக இருந்த நிலையில், அணைக்கான நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இரவு 95 அடியை எட்டியது. இந்நிலையில் தொடர் மழையால் அணைக்கான நீர் வரத்து 14 ஆயிரம்  கன அடியாக இருந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர  துவங்கி திங்களன்று அதிகாலை 4  மணியளவில் அணை அதன் முழு  கொள்ளளவான 100 அடியை நெருங்கி யது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97 அடி யாக நிலை நிறுத்தி பராமரிக்கும் வித மாக அணைக்கான தற்போதைய நீர் வரத்தான வினாடிக்கு 14 ஆயிரம் கன  அடி நீர் அப்படியே உபரி நீராக பவானி யாற்றில் வெளியேற்றப்பட்டு வருகி றது. இதனால் ஆற்றின் வேகம் அதிக ரிக்க துவங்கிய நிலையில் பவானியாற் றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, மேட்டுப்பாளை யம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள்  எச்சரிக்கையுடன் இருக்கவும் ஆற்றில்  இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ,  பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற் சிக்கக் கூடாது என அறிவுறுத்தபட்டுள் ளது.