சேலம் சிறை தியாகிகள் நினைவு தினம் புதனன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட, திருச்செங்கோடு நகர, ஒன்றியக் குழு அலுவலகம் மற்றும் சேலம் சிறைத்தியாகி தோழர். காவேரி அவர்களின் சொந்த ஊரான சூரியம் பாளையத்தில் கட்சியின் அலுவலகம் முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவர் ஏ.ஆதிநாரயணன் மற்றும் கட்சியின் நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
