சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் சாலையோர மலர்கள்!
உதகை, பிப்.21- மசினகுடி சுற்றுவட்டார பகுதி சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள், அவ்வழியாக வரும் சுற்று லாப் பயணிகளை வரவேற் பது போன்று காட்சியளிக் கின்றன. நீலகிரி மாவட்டத்தில் மழை, குளிர் மற்றும் கோடைக் காலம் என அந்தந்த சீசன் காலங்களில் பூக் கக்கூடிய பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, கோடைகாலத்தில் வனப்பகுதி முழுவதுமாக பசுமை இழந்து காணப்பட்டா லும், கோடை சீசனுக்கு உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பூக்க கூடிய பிளேம் ஆப் தி ஃபாரஸ்ட் (Flam of the forest) எனப்படும் இலை புரசு மற்றும் சீமை அகத்தி எனப்படும் கிளீரி சீடியா மரங்க ளும் உள்ளன. இந்த மரங்கள் மசினகுடி மற் றும் அதனை ஒட்டியுள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அதிகளவில் உள்ள நிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, சாலை யோரங்களில் வரிசையாக உள்ள இலை புரசு மரங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் கலந்த நிறத்தில் பூத்துக் குலுங்கும் பிளேம் ஆப்தி பாரஸ்ட் மலர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. நீண்ட தூரத்திலிருந்து இந்த மலர்கள் பூத்துள்ள மரத்தை பார்க்கும் போது, ‘தீ ஜுவாலை பற்றி எறிவது’ போல காட்சியளிப் பதால் இந்த மரத்தை பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இதே போல மசி னகுடி, மாவ நல்லா நெடுஞ்சாலையின் இரு புறமும் உள்ள கிளீரி சீடியா என்ற சீமை அகத்தி மரத்திலும் மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன. இவற்றை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
