tamilnadu

img

தொப்பூர் கணவாயில் சாலை விபத்து

தொப்பூர் கணவாயில் சாலை விபத்து

தருமபுரி, ஜூன் 22- தொப்பூர் கணவாய் மலைப்பாதையில் ஏற்பட்ட சாலை  விபத்தால், ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட் டது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் மலைப்பாதை யில், தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணி கள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதாலும், போக்குவரத்து விதி களைப் பின்பற்றாமல் செல்வதாலும் தினசரி சாலை விபத்து கள் தொடர்கின்றன. இந்நிலையில், சனியன்று மலைப்பாதை யில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால்  வந்த டிப்பர் லாரி மோதியது. இதனால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை காவல் துறையி னர் நிகழ்விடத்துக்குச் சென்று, விபத்தில் சிக்கிய வாகனங் களை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும்  பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு  மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட் டது.