tamilnadu

img

சாலைகளை சீரமைக்க மாதர் சங்கம் மனு

சாலைகளை சீரமைக்க மாதர் சங்கம் மனு

உதகை, ஜூன் 19- குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை உடன டியாக சரி செய்ய வேண்டும் என கூடலூர் தாலுகா மாதர் சங்க நிர்வாகிகள் நகர் மன்ற தலைவரிடம் வியாழனன்று மனு அளித்தனர். அனைத்திந்திய ஜன நாய மாதர் சங்கம் நீலகிரி மாவட்டம், கூடலூர் ஏரியா கமிட்டியின் 11 ஆவது மாநாடு கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை தொகுத்து நகர் மன்றத் தலைவர் பரிமளாவிடம் மனுவாக அளித்தனர். அம்மனுவில், கூடலூர் நகராட் சிக்குட்பட்ட பல பகுதிகளிலும் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் விணாகி, பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் உள்ளது. எனவே உடனடியாக அதை சரிசெய்து பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டட  வரிகளை குறைக்க வேண்டும். நகராட்சி யில் குண்டும், குழியுமாக உள்ள சாலை களை உடனடியாக சரி செய்ய வேண்டும். மங்குழி பகுதியில் குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இதில்,  ஆறு வருட காலமாகியும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யாமல் உள்ளது. உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன. முன்னதாக மனு கொடுக்கும் இயக்கத் தில் மாதர் சங்க ஏரியா தலைவர் கே.பி.கௌசல்யா, செயலாளர் சோபா அரவிந்தன், துணைத் தலைவர் ஜிஷா மற்றும் ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் என திரளா னோர் கலந்து கொண்டனர்.